Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 14ம் தேதி மகர சங்கரம பூஜை மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள்; ஸ்பாட் புக்கிங்கை நிறுத்த ஆலோசனை மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள்; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் வெடி வழிபாடு; நான்கு கவுன்டர்கள் அமைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் வெடி வழிபாடு; நான்கு கவுன்டர்கள் அமைப்பு

பதிவு செய்த நாள்

07 ஜன
2025
11:01

சபரிமலை; சபரிமலையில் பக்தர்கள் வெடி வழிபாடு நடத்த நான்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபரிமலை வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனாக வெடிவழிபாடு நடத்துகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளாலும், வனத்துறையின் எதிர்ப்பாலும் அடிக்கடி இந்த வெடி வழிபாடு முடங்கியது. எனினும் இந்தாண்டு சீசனில் துவக்கம் முதலே வெடி வழிபாடு நடந்து வருகிறது. அதிகமான பக்தர்கள் இந்த வழிபாட்டை நடத்தி செல்கின்றனர். இதற்காக மாளிகைபுரம் கோயில் முன்புறத்திலும், சந்திராங்கதன் ரோட்டில் பெய்லி பாலம் துவங்கும் இடத்திலும், பெரிய நடைப்பந்தல் கீழ் பகுதியிலும், அதன் மேலே பிளை ஓவரிலும் இந்த கவுன்டர்கள் உள்ளன. ஒரு வெடி வழிபாடு நடத்த இருபது ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை கவுன்டரில் செலுத்தினால் அங்கு இருக்கும் ஊழியர் பக்தர் பெயரை ஒலிபெருக்கியில் அறிவித்ததும் 600 மீட்டர் தூரத்தில் வெடி கொளுத்தப்பட்டு வெடிக்கும். வெடி வெடிக்கப்படுகிறதா என்பதை பக்தர் அந்த கவுன்டரில் இருந்தே பார்க்கும் வகையில் பெரிய டிவி வைக்கப்பட்டுள்ளது. முன்காலத்தில் கரிமலை, சரங்குத்தி போன்ற இடங்களிலும் வெடி வழிபாடு நடந்தது. இது காட்டு விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தும் என்பதால் வனத்துறை தலையிட்டு இதை தடை செய்தது. 2023 ஜனவரி 2ம் தேதி மாளிகைபுறம் கோயில் சமீபம் உள்ள வெடிப்புரையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். இதனால் கடுமையான பாதுகாப்பு விதிகள் விதிக்கப்பட்டு தற்போது வெடி வழிபாடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த மண்டல மகர விளக்கு உற்ஸவ காலத்தில் 1500 கிலோ வெடி மருந்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar