Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி அடைக்கலம் காத்த அய்யனார் ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 முதல் ஜூலை 24 வரை மூலவருக்கு அபிஷேகம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஜன. 29 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான கல்வெட்டு, ஆஞ்சநேயர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
300 ஆண்டு பழமையான கல்வெட்டு, ஆஞ்சநேயர் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 ஜன
2025
05:01

கிருஷ்ணகிரி; பர்கூர் அருகே, 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில், ராமசாமி கிருஷ்ணசாமி என்ற, 14ம் நுாற்றாண்டை சேர்ந்த,  2 கோவில்கள் உள்ளன. இதில், பழைய ரயில் பாதைக்கு அருகே மலையடிவாரத்திலுள்ள ராமசாமி கோவில் அருகே, அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு நடத்தின. அங்கு, 18 அடி உயர பாறையில், 8 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் மலரையும், ஒரு கையை தலைக்கு மேல் துாக்கி அடிக்கும் பாவனையில், இடுப்பில் குறுவாளும் உள்ளது. பாறையில் ஆஞ்சநேயருக்கு இடது பக்கம், 7 வரிகளை கொண்ட தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இது குறித்து, ஓய்வுபெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், “300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டில், இராயதிம்மநேயிடு என்னும் பெயர் கொண்ட ஆஞ்நேயரின் உருவத்தை, தேவப்பராயர் என்பவர் ஏற்படுத்தி, தொடர்ந்து பூஜை நடக்க தானமும் தந்துள்ளார். இதை காப்பாற்றுகிறவர் இறந்த பின் வைகுந்தத்துக்கு செல்வார் என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது,” என்றார். ஆய்வில், அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி, மல்லப்பாடி சங்கீத், தொல்லியல் மாணவர் திவித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ச  வரத ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar