Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வத்திராயிருப்பு நல்லதங்காள் ... 37 அடி உயர ஸ்ரீராமர் பட்டாபிஷேக ஸ்ரீசஞ்சீவன ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் 37 அடி உயர ஸ்ரீராமர் பட்டாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில் புனிதத்தை கலங்கப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில் புனிதத்தை கலங்கப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை தேவை

பதிவு செய்த நாள்

27 ஜன
2025
10:01

போடி; இந்து முன்னணி சார்பில் மதுரை கோட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் மாநில செயலாளர்கள் முத்துக்குமார், சேவகன் தலைமையில் போடியில் நடந்தது. மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன், கோட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் சுந்தர், செயலாளர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தனர். பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நகர பொதுச் செயலாளர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் கலந்து கொண்டு பேசினார்.


கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய கோயில் புனிதத்தை கலங்கப்படுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, வழி பாட்டிற்கான வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் வெளிநாட்டினர் ஊடுருவலை தமிழக அரசு தடுக்க வேண்டும். ரயில் பாதுகாப்பு சதி திட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் சிறை அதிகாரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்திட வேண்டும். தேனி மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி மத மாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தமபாளையத்தில் விரைவில் தேர் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar