தை அமாவாசை; விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2025 02:01
திருவாரூர்; விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில், தை அமாவாசையை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயிலில், தை அமாவாசையன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு பதஞ்சலி மனோகரர், கிழக்கு நோக்கியும், அம்மன் மதுரபாஷினி தெற்கு நோக்கியும், அருள்பாலிக்கின்றனர்.பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் தை அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், இங்குள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இன்று தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து சிவ பக்தர்கள் பிதுர் தோஷத்திற்காக வந்தனர். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். அதன் பின் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு அன்னாபிஷேகத்தை கோவில் அர்ச்சகர் சந்திரசேகர சிவாச்சாரியர் நடத்தி வைத்தார். இதே போன்று திருவாரர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட சிவத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.