பதிவு செய்த நாள்
03
பிப்
2025
11:02
திருவாலங்காடு; திருவாலங்காடில் சார் – பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், 2011ல், கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மாலை, 6:00 மணிக்கு, தீபாராதனை, முதற்கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.