Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் யானைகளுக்கு ஆயுள் குறைவது ... உத்தரகோசமங்கை கோயில் பிரம்ம தீர்த்தத்தில் சாக்கடை! உத்தரகோசமங்கை கோயில் பிரம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரத்தில் 2ம் கட்ட லட்சார்ச்சனை விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2012
11:12

கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள் பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில், ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மேலும் இவ்வாண்டு ராகுபெயர்ச்சி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடப்பதால், இவ்விரு விழாவையும் விமர்சையாக நடத்த கோவில் நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கடந்த மாதம், 30ம் தேதி கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நடந்தது.கடந்த இரண்டாம் தேதி காலை ராகுபகவான் விருச்சிக ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைவதையொட்டி, காலை, 10 மணிக்கு கடம் ஊர்வலமாக புறப்பட்டு, ராகுபகவான் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. 10.05 மணி முதல், எண்ணெய், மஞ்சள், மாப்பொடி, திரவியப்பொடி, இளநீர், தேன், தயிர், பால், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் என சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின் காலை, 10.45 மணிக்கு, ஒன்பது கடங்களில் எடுத்து வரப்பட்டு புனிதநீர் அபிஷேகம் நடந்தத. 10.53 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை ராகுபகவான் சன்னதியில், இரண்டாம் கட்ட பரிகார லட்சார்ச்சனை துவங்கியது. சரவணன் சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று அர்ச்சனை செய்தனர். ஏற்பாடுகளை உதவி கமிஷனர் பரணிதரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar