Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் ... இளையனார்வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தெப்போற்சவம் விமரிசை இளையனார்வேலூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோவில் சீரமைப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

08 பிப்
2025
07:02

காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்., மாதம் 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து தொல்லியல் துறையின், ரசாயண பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 


இதுகுறித்து தொல்லியல் துறையின் ரசாயண பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் சீரமைப்பு பணி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ரசாயண தன்மை இல்லாத நுரைப்பு எண்ணெயை கலந்து, அதை நுரைக்க வைத்து, இலகுவான பிரஷ் வாயிலாக துாய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், கோபுரத்தின் மீது மழைநீர் படியாத வகையில் மெழுகு போன்ற படிமம் பூச்சு பூசப்படும். தற்போது 50 சதவீத பணி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar