Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டு தயாரிக்க முந்திரி ... மழைக்காக சிறப்பு பூஜை கிராம மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 18ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2012
11:12

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. பல மன்னர்கள் இக்கோவிலில் திருப்பணி செய்துள்ளனர். கோவில் வளாகத்தில் கல்வெட்டுகளும் உள்ளன. கோவில் கருவறை மேற்கு பார்த்து இருப்பதால், "மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம் தேர்த்திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. கணபதி வேள்வி மற்றும் கொடியேற்றம் 19ம் தேதி காலை நடக்கிறது. 20ம் தேதி காலை, சுவாமி சூரிய வாகனத்திலும், மாலை சந்திர வாகனத்திலும் உலா வருதல் நடக்கிறது. பூத வாகனத்தில், 21ம் தேதி மாலையும், புஷ்ப பல்லக்கில் 22ம் தேதி மாலையும் சுவாமி உலா நடக்கிறது.விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் ஊர்வலம் 23ம் தேதி இரவு நடக்கிறது. 24ம் தேதி காலை 10.00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், மதியம் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. மாலையில் சுவாமி யானை வாகனத்தில் உலா நடக்கிறது. 25ம் தேதி காலை சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், அகிலாண்டேஸ்வரி சன்னிதானம் அரங்கநாதசாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், அவிநாசி ராஜசரவண மாணிக்கவாசக அடிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் அதிகாரிகள் தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் வழக்காடு மன்றம் நடக்கிறது. குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா 26ம் தேதி மாலையும், தெப்போற்சவம் 27ம் தேதி மாலையும் நடக்கிறது. ஏற்பாடுகளை திருமுருகன் அருள்நெறிக்கழகத்தினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar