Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் கோயிலில் பாதுகாப்பு! திருமலையில் சொர்க்க வாசல் தரிசனம்! திருமலையில் சொர்க்க வாசல் தரிசனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தனியார் பெயரில் கோவில் நிலங்கள் ஏராளம்: அறநிலைய துறை மீட்குமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2012
11:12

பல்வேறு மாவட்டங்களில், இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தனியார் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன, இதைக் கண்டறியும் பணி பிரமாண்டமானது.இவைகளை, மீண்டும் கோவில் பெயருக்கு பட்டா மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ள, உரிய நடவடிக்கை தேவை என்ற கருத்து, பரவலாக எழுந்திருக்கிறது. தனியார் பெயரில்:தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு, சொந்தமாக, பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், வாடகைக்கு இருந்தவர்கள், குத்தகைக்கு எடுத்தவர்கள், முறைகேடான வகையில், சூழ்நிலையை சாதகமாக்கி, தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை, தற்போது, அந்தந்த மாவட்ட வருவாய்துறை மூலம், கோவில் நிலங்களை, கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது. சமீபகாலமாக இப்பணியில் கடும் மந்தம் ஏற்பட்டு வருகிறது.

தொய்வு:ஆரம்பத்தில், தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள் குறித்து, ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபகாலத்தில், இப்பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்நிலங்களை மீட்டு, மீண்டும் குத்தகைக்கு விட்டால், வருடத்திற்கு பல கோடி ரூபாய் வருமானம் வரும். கோவில் நிலங்களை பல தலைமுறைகளாக வைத்திருப்போர், உழவு செய்ய முடியாத அல்லது அந்த ஊரை விட்டு வெளியேறும் போது, வேறு சிலரிடம் ஒப்படைத்தது உண்டு. அது, காலப்போக்கில் தனித் தனி குடும்பங்களுக்கு சொந்த நிலமாக மாறிவிட்டது. ஆனால், இப்போது கோவில்களுக்கு உள்ள சொத்துக்களை பட்டியலிட்டால், அதில் காணாமல் போன சொத்துக்கள் ஏராளம். தற்போது அதன் உரிமையாளர்களாக இருப்பவர்கள், ஏற்கனவே தாங்கள் அந்த சொத்தை வாங்கும் போது தந்த பணம், அது தற்போதைய மதிப்பில் என்ன விலை என்று கணக்கிட்டால், அது பல ஆயிரம் கோடி ரூபாய்களாக வரும்.இதை கணக்கீடு செய்யும் முறை முழுவீச்சில் நடத்தப்பட இந்து சமய அறநிலையத்துறையில் இருக்கிறதா அல்லது அதற்கேற்ற சட்ட நெறிமுறைகள் இந்து அறநிலையத்துறையிடம் இருக்கிறதா என்பதை யாரும் விளக்க முன்வரவில்லை. ஆந்திராவில் கோவில் சொத்து, மற்றவர்களிடம் சேர முடியாத வகையில் சட்ட நடைமுறைகள் உள்ளன. நில மதிப்பு அதிகரித்த நிலையில், இதற்கான ஒழுங்குமுறையை உருவாக்காத பட்சத்தில், கோவில் சொத்தை அனுபவிப்பவர்கள் காட்டில் நல்ல மழை தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar