Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனியார் பெயரில் கோவில் நிலங்கள் ... பாழாகும் நந்தீசுவரர் கோவில் குளம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் சொர்க்க வாசல் தரிசனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 டிச
2012
11:12

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு தரிசனம் தொடர்பாக, தேவஸ்தானம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. தரிசன டிக்கெட்டிற்கு முன்பதிவு பற்றிய அறிவிப்பை பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.திருமலை கோவிலில், வரும் 23ம் தேதி, வைகுண்ட ஏகாதசி, 24ம் தேதி துவாதசியையொட்டி, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படும். சொர்க்க வாசல் தரிசனத்தில் பங்கேற்க, நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களிலும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரையில் சொர்க்க வாசல் தரிசனம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.கடந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி, தேவஸ்தானம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தது. 20 நாட்களுக்கு முன்பே, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலம், 300 ரூபாய் மற்றும் பாதயாத்திரை பக்தர்களுக்கு, 100 ரூபாய் டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. இந்த டிக்கெட் வாங்கியவர்கள் தரிசனம் செய்வதற்காக, விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தது.இந்த தரிசனத்தில் பங்கேற்றவர்கள் பலரும், தேவஸ்தானம் செய்திருந்த ஏற்பாட்டை பாராட்டி இருந்தனர். மேலும், அனைத்து பக்தர்களின் தரிசன வசதிக்காக, வி.வி.ஐ.பி.,- வி.ஐ.பி.,க்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் தேவஸ்தான அறிவிப்பு வெளியிட்டது. இதையும் மீறி, குவிந்து விட்ட வி.ஐ.பி.,களுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலை வழங்கவில்லை என, ஆந்திராவைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு சொர்க்க வாசல் தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு போல் முன்பதிவு இல்லாததால், வைகுண்டா ஏகாதசிக்கு, திருமலைக்கு வரும் பக்தர்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar