Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் சொர்க்க வாசல் தரிசனம்! அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாழாகும் நந்தீசுவரர் கோவில் குளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2012
11:12

கூடுவாஞ்சேரி: நந்திவரம், நந்தீசுவரர் கோவில் குளத்தில், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் விடப்படுவதால், சகதியாக காட்சியளிக்கிறது. புகழ்பெற்ற இக்கோவில் குளத்தை சீரமைத்து, பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூற்றாண்டு பழமை...

நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், நந்திவரம் பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர நாயகி உடனுறை நந்தீசுவரர் திருக்கோவில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். உற்சவம், பிரதோஷம், திருஆதிரை போன்ற காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலின் கிழக்கு நுழைவாயில் அருகே, மிகப்பெரிய பரப்பில் நந்தீசுவரர் குளம் அமைந்துள்ளது.

கழிவுநீர் கலப்பு: அப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், பராமரிப்பில்லாத காரணத்தால், கரைப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் குப்பை அனைத்தும் கோவில் குளத்தில் விடப்படுகின்றன. இதனால், நீர் மாசடைந்து சகதியாக காட்சியளிப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், "மிகப்பெரிய பரப்பு கொண்ட கோவில் குளம், ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. குளம் முழுவதும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து புதர் மற்றும் சகதியாக காட்சியளிப்பதால், பக்தர்கள் கோவில் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது, என்றார்.

ஆக்கிரமிப்பு: மேலும், "குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு இங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னையில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கூறினார். கோவில் செயல் அலுவலர் வடிவேல் கூறுகையில்,"கோவில் மற்றும் குளத்தினை சுற்றியுள்ள இடங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்துள்ளனர். இதை அகற்ற கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும், குளத்தினை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஒரு தடவை விஷ்ணுபதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக வசந்த உற்ஸவம் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் இன்று (மே 14) பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar