Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்; ... திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு திருப்பரங்குன்றம் மலை பகுதியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடிய விடிய நடந்த பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் விடிய விடிய நடந்த பல்லக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2025
10:02

ஓசூர்; சந்திரசூடேஸ்வரர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்லக்கு உற்சவத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய கண்டு பக்தர்கள் கலந்து கொண்டனர்.


ஓசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனுரை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில் தேர்த்திருவிழா வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஓசூரில் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில் பல்லக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசூடேஸ்வரர், ஸ்ரீமரகதாம்பிகை அம்மன், ஸ்ரீகோட்டை மாரியம்மன், ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி, முருகன், தர்மராஜா, ராமர், கிருஷ்ண சாமி, துர்க்கை அம்மன், காளி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட ஊர் காவல் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து ஓசூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. மேள, தாள வாத்தியங்கள், நையாண்டி மேள ஆட்டம், வான வேடிக்கைகளுடன் ஒசூர் நகரில் தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, ஏரி தெரு, ராம்நகர், பெரியார் நகர், எம் ஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு ஊர்வலம் விடிய, விடிய நடந்தது. அப்போது பக்தர்கள் காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்த பல்லக்கு உற்சவத்தில் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் பல்லக்கு உற்சவம் மற்றும் கரக ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேய்பிறை பஞ்சமி வாராகி அம்மனை வழிபட உகந்த நாளாகும். பஞ்சமி திதியில் தான் வாராகி அம்மன் அவதரித்தார். ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா முன்னிட்டு, குண்டம் கண் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி கோயிலில் சாஸ்திரப்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட்டது.நாளை ஜூலை 16 ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆனி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நாளை கோலாகலமாக நடக்க உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar