பதிவு செய்த நாள்
18
பிப்
2025
03:02
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது.
ராமேஸ்வரம் கோயிலில் தை அமாவாசை, மாசி மகா சிவராத்திரி, ஆடி திருக்கல்யாணம் திருவிழாக்கள் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு இன்று கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் கோயில் குருக்கள் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். பின் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, ஆய்வாளர் சிவக்குமார், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், பா.ஜ., நிர்வாகி ராஜசேகர், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிப்., 24ல் கோயிலில் இருந்து முத்தங்கி சேவையில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கில் வீதி உலா, பிப்.,26ல் மாசி மகா சிவராத்திரி யொட்டி மாசி தேரோட்டம், பிப்., 27ல் மாசி அமாவாசை அன்று கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.