மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2025 05:02
கோவை; மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 04.04.2025 அன்று திருக்குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. திருக்குடமுழுக்கு பணிகள் விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தினால் வரும் 20ம் தேதி முதல் 06.04.2025 வரை மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும் 20.02.2025 முதல் 06.04.2025 வரையுள்ள செவ்வாய்கிழமை, ஞாயிற்றுகிழமை. கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இரண்டு சக்கர வாகனங்கள் மலைமேல் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.