கோவை; பாரதி பார்க் A. ராமலிங்கம் காலனி அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் எதிரே அமைந்துள்ள அருள் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் மூலவர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.