திருப்பூர்; ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காரிநாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சிவாச்சாரியார்கள், 63 நாயன்மார்கள் வரிசையில் உள்ள, காரிநாயனாருக்கு, மாசி பூராட நட்சத்திர நாளான நேற்று, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். அர்த்தசாம பூஜை அடியார்கள், மாணிக்கவாசகர் அடியார் திருக்கூட்டத்தினர், சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை, தேவாரம் மற்றும் திருவாசக பதிகங்களை பண்ணிசையுடன் பாடி வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.