பாவங்களின் தன்மைக்கேற்ப தான் தண்டனை நிர்ணயிக்கப்படும். நியாயமான ஒன்றுக்காக பாவம் செய்ய நேர்ந்தால், அது புண்ணியக்கணக்கில் சேரும் என்கிறார் வாரியார் சுவாமி. நள்ளிரவில் ஒரு பெண் செல்கிறாள். நகைக்காக அவளைக் கொலை செய்கிறான் ஒருவன். அந்தக் கொலை பாவமானது. ஒரு கணவனும், மனைவியும் செல்லும் போது, பத்துபேர் வழி மறிக்கிறார்கள். அந்தப் பெண்ணிடம் நகையைப் பறிக்க முயல்கிறார்கள். அப்போது ஒரு பலசாலி வந்து, அந்த பத்து பேரையும் அடித்துக் கொன்று விட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறான். பத்து கொலை செய்தாலும், அது பாவமாகாமல் புண்ணியமாகிறது. செய்யும் செயலின் தன்மைக்கேற்ப, பாவம் புண்ணியம் நிர்ணயிக்கப்படும், என்கிறார் அவர்.