காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2025 03:02
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் இன்று பூச்சொரிதல் விழா நடந்தது.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கண பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இவ்வாண்டு திருவிழா மார்ச் 11ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விழாக்கள் நடைபெறும். மார்ச் 18 ஆம் தேதி கோயில் கரகம், மது முளைப்பாரி நடைபெறுகிறது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 19ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி இன்று பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மக்கள் பூத்தட்டுகள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். மார்ச் 9 ஆம் தேதி சுமங்கலி பூஜை நடைபெறுகிறது.