பதிவு செய்த நாள்
26
பிப்
2025
03:02
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் மற்றும், 1,008 சங்காபிஷேகம் நடந்தது. மூன்று யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் 1,008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 11:00 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு நான்காம் கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுதும் கோவில் நடை திறந்திருந்தது.