Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் மகாசிவராத்திரி விழா; ... பழநி மாசித் திருவிழா: பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் பழநி மாசித் திருவிழா: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 அடி உயர நெல் மணிகளால் உருவான சிவலிங்கம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
12 அடி உயர நெல் மணிகளால் உருவான சிவலிங்கம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2025
05:02

சேலம்; மகா சிவராத்திரி முன்னிட்டு உணவிற்கு குறைவில்லாமல் இருக்க 12 அடி உயரத்தில் கோடிக்கணக்கான நெல் மணிகளைக் கொண்டு உருவான சிவலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


சிவபெருமானுக்கு உகந்த நாளான மாசி மாதத்தில் அமாவாசை முதல் நாளன்று வரக்கூடிய மகா சிவராத்திரி எனப்படும் இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் இரவு நேரத்தில் செய்யப்பட்டு பக்தர்கள் கண்விழித்து விரதம் மேற்கொண்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனடிப்படையில் உலகம் முழுவதும் மகா சிவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி திருக்கோவில் வாசவி கிளப் மற்றும் பொன்னம்மாபேட்டை ஆரிய சமாஜம் இணைந்து மகா சிவராத்திரி வைபவம்  கொண்டாடப்பட்டது. கோடிக்கணக்கான நெல் மணிகளைக் கொண்டு சிவலிங்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியார் கோடிக்கணக்கான நெல்மணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட  சிவலிங்கத்திற்கு  லட்சார்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு வாசலை மலர்களாலும் விலை உயர்ந்த நகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டனர். தொடர்ந்து குருக்கள் அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மகா சிவராத்திரி வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் அன்னதானம் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar