பதிவு செய்த நாள்
05
மார்
2025
03:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 18ம் தேதி கம்பம் நடுதல், 28ம் தேதி முதல் நேற்று வரை விரதமிருந்த பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். இன்று, காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக மஞ்சள் இடிக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. கோவில் வளாகத்தில் துவங்கி, வெங்கட்ரமணன் வீதியில் முதல் நாள் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை மாலை அங்கிருந்து தேரோட்டம் துவங்கி, சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. வரும், 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம் அங்கிருந்து துவங்கி, கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, மஞ்சள் நீராடுதல், இரவு, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி இரவு, மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.