Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவனாக வாழுங்கள்! வாய்மையே வெல்லுமடா! அதன் வழியிலே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினால் நம்புங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2012
05:12

ஜாஜி முதல்வராக இருந்த சமயம் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உண்டானது. நீர்த்தேக்கங்கள் வற்றிவிட்டன. கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து போனது. சென்னையில் இருந்து மக்கள் வெளி யேறினால் தான் பிரச்னை தீரும் என்ற நிலை ஏற்பட்டது. அதிகாரிகளும் இதே யோசனையைத் தெரிவித்தனர். இந்த யோசனையை முதல்வர் ராஜாஜி ஏற்கவில்லை. அவர் வேறொரு கருத்தை வெளியிட்டார். அதன்படி, ஒரு குறிப்பிட்டநாளில் சென்னையைக் காப்பாற்றுமாறு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்யும்படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.  சட்டபேரவையில் ஒரு கட்சியினர் ராஜாஜி கூறியதைக் கேலி செய்தார்கள். சென்னை நகரைக் காப்பாற்ற இது தான் ராஜாஜியின் வழி என்றால், மக்களைக் காப்பாற்ற வழியே இல்லை  என்றும் அவர்கள் கிண்டலடித்தனர்.  ஆனால், முதல்வரின் வேண்டுகோளின்படி மக்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 24மணி நேரத்திற்குள் சென்னை நகரில் மேகங்கள் திரண்டன. மூன்றுநாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. நீர்த்தேக்கங்கள், ஏரி,குளங்கள் அனைத்தும் நிரம்பின. குடிநீர் பிரச்னையில் இருந்து சென்னை தப்பியது. இந்த நிகழ்ச்சி நடந்தது ஒரு மே மாதத்தில். அது கடுமையான கோடை காலம். பிரார்த்தனையால் மழை பெய்ததாக தாங்கள் கருதவில்லை என்றும், இது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் எதிர்க்கட்சியினர் கருத்து வெளியிட்டனர்.  அதற்கு ராஜாஜி, நீங்கள் எது வேண்டுமானாலும் கூறுங்கள். மனப்பூர்வமாகப் பிரார்த்தனை செய்தால், அதிசயம் நிகழும் என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு அத்தாட்சி, என பதிலளித்தார். நம்பியவர்க்கு நடராஜன், நம்பாதவர்க்கு வெறும் ராஜன் என்று ஒரு சுலவடை சொல்வார்கள். நம்பினார் கெடுவதில்லை என்ற வேதங்களின் கூற்றுக்கு இந்த நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar