Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நம்பினால் நம்புங்கள்! மணப்பெண்ணுக்கு மெட்டி, வளையல் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாய்மையே வெல்லுமடா! அதன் வழியிலே நாம் செல்வோமடா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2012
05:12

*எல்லா உயிர்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அச்சம், பகை உணர்வில் இருந்து விடுபட்டவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு தர மாட்டார்கள்.
*கொல்லாமை என்னும் தூயநெறியைப் பின்பற்றினால் வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும்.
*வாய்மையே உலகில் சிறந்ததாகும். அதன் வழியிலேயே நாம் நடக்க வேண்டும். வாய்மை சந்திர மண்டலத்தை விடத் தூய்மையானது. சூரியமண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கது.
*கடினமானதும், பிறர் மனம் புண்படுத்துவதுமான கடுஞ்சொற்களைப் பேசாதீர்கள். 
*பிறருக்குப் பகிர்ந்து உண்ணப் பழகுங்கள். பிறருக்குக் கொடுக்காமல் எந்தப் பொருளையும் எடுப்பது கூடாது.
*பல் குத்த உதவும் சிறிய குச்சியாக இருந்தாலும் உரியவரிடம் அனுமதி பெறாமல் எடுப்பது கூடாது.
*ஆமை உறுப்புகளை தன்னுள் அடக்கிக் கொள்வது போல, உலக கவர்ச்சியில் இருந்து தன்னை அடக்கப் பழகுபவனே சாதனையாளன்.
*பசியைப் போக்கும் விதத்தில் குறைந்த அளவு உண்பதும், தேவையான சமயத்தில் மட்டும் குறைவாகப் பேசுவதும் நல்லது.
*மனம் விரும்பியதை எல்லாம் எப்போதும் நம்மால் அடைய முடியாது. அதற்காக ஒருபோதும் மனம் தளர்ந்து விடுதல் கூடாது.
*மகிழ்ச்சியால் துள்ளுவதும், துன்பத்தால் துவள்வதும் விரும்பத்தக்கது அல்ல. இன்பத்திலும் துன்பத்திலும் மனச் சமநிலையை இழக்காதீர்கள்.
*கோபம், பொறாமை, நன்றியின்மை, பிடிவாதம் போன்ற தீய குணங்கள் மனிதனை அழிவு பாதையில் தள்ளி விடும்.
*நோயாளிக்கும், நலிவுற்றோருக்கும் சேவை புரிவதற்கு தயாரான மனநிலையில் எப்போதும் இருங்கள்.
*தற்பெருமையுடன் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மனிதர்களிடம் இருந்து சற்று விலகியே இருங்கள்.
*தர்மம் என்னும் தீப ஒளியை மனதில் ஏற்றி வையுங்கள். இதனால் அஞ்ஞான இருள் நம்மை ஒருபோதும் தீண்டுவதில்லை.
*பின்பற்றுவதற்கு கடினமானதாக இருந்தாலும், தர்மத்தை விடச் சிறந்த பயன் தரும் நெறி உலகில் வேறில்லை.
*பெற்றோர், பிள்ளைகள், சொந்தபந்தம் யாரும் துணைக்கு வரமாட்டார்கள் அவரவர் செய்த தர்மமே ஒருவனுக்கு உற்றதுணையாகும்.
*வெறுப்புணர்வுடன் மற்றவர்களைப் புறக்கணிப்பவன் நீண்டகாலம் பிறப்பு, இறப்பு சுழலில் சிக்கித் தவிக்க நேரிடும்.
*எதையும் யோசித்து நிதானத்துடன் அழகாகப் பேசுபவன் நல்லோர்களின் பாராட்டைப் பெறுவான்.
*பிறர் மீதுள்ள குற்றங்குறைகளையே தேடிக் கண்டுபிடித்து திரியாதீர்கள். உங்களிடமுள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள முயற்சியுங்கள்.
*பாவச் செயல்களைச் செய்ய முயலாதீர்கள். பிறரும் செய்வதற்கு தூண்டுகோலாகவும் இருக்காதீர்கள்.
*வியாபாரத்தில் நேர்மையைப் பின்பற்றுங்கள். கபடமாக செயல்படாதீர்கள். நியாயமான வழியில் பொருளைத் தேடுங்கள்.
*பிறர் செய்த உதவியை எப்போதும் நன்றியுணர்வுடன் மதித்துப் போற்றுங்கள். நன்றி யுணர்வு என்பது யானைத்தந்தம் போல மதிப்புடையது.
*அன்பில்லாத மனிதன் பால்சோறு அளித்தாலும் அதில் இனிமையோ சுவையோ இருப்பதில்லை.
*உண்மையான உழைப்பில் கிடைக்கும் ஊதியமே மதிப்பு மிக்கதாகும்.
- மகாவீரர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar