திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2025 04:03
திருச்சுழி; திருச்சுழியில் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. இக்கோயிலில் மாசி திருவிழாவில் நேற்று இரவு தங்க கொடி மரத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தது. அபிஷேகங்கள், புனித நீர் தெளிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி, ரிஷப, மயில், அன்னம் வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. மார்ச் 14 ல், பொங்கல் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.