வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2025 04:03
மேலூர்; அம்பலகாரன் பட்டியில் வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. மார்ச் 13 காலையில் மஞ்சுவிரட்டும், மாலையில் பூரணி மற்றும் பொற்களை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 14 கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மார்ச் 15 ல் தேரோட்டமும், மார்ச் 16 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.