வடமதுரையில் சரபேஸ்வரர் யாக பூஜை; ஜப்பான் நாட்டினரும் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2025 10:03
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஊராளிபட்டியில் இருக்கும் திருவாடுதுறை மகா சன்னிதானத்தின் சரபேஸ்வரர் பீடத்தில் உலக நன்மை வேண்டி நடந்த சிறப்பு யாக பூஜையில் ஜப்பான் நாட்டினர் பங்கேற்றனர். உலகில் தற்போது நடக்கும் போர், கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்கள் மாற இந்த சிறப்பு யாகம் நடந்தது. மஞ்சள் கிழங்கு, நாயுருவி, ஜாதிக்காய், மாசிக்காய், ஏலம், கிராம்பு, உள்ளிட்ட 108 வகையான மூலிகை பொருட்கள் யாக குண்டத்தில் விட்டு ஹோமம் வளர்த்தனர். கடந்த ஒரு மாதம் காலமாக தமிழ்நாட்டில் உள்ள சிவ பஞ்சபூத தலங்கள், அறுபடை வீடு முருகன் கோவில்கள் என ஆன்மீகப் பயணம் முடித்த ஜப்பான் நாட்டினர் பழனி வராகி கோயில், பூம்பாறை முருகன் கோவில், வடமதுரை ஊராளிபட்டி சரபேஸ்வரர் மடம் ஆகியவற்றில் நடந்த இந்த யாக பூஜைகளில் பங்கேற்றனர்.