காஞ்சிபுரம் காமாட்சியம்மன் தங்க பல்லக்கில் ராஜ வீதிகளில் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2025 10:03
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில், பிரம்மோத்சவம் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வெள்ளி விருஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும், எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். ஐந்தாம் நாள் உத்சவமான நேற்று காலை தங்க பல்லக்கிலும், இரவு நாக வாகனத்திலும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். ஆறாம் நாள் உற்சவமான இன்று காலை முத்து சப்பரத்திலும், இரவு தங்க கிளி வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உத்சவம் வரும் 11ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது.