காஞ்சிரங்குடி செந்தில் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2025 05:03
கீழக்கரை; கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேல் சிறிய கோயிலாக கட்டப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் கோயில் திருப்பணிகளுக்கு பிறகு செந்தில் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. மார்ச் 8ல் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜை, எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு செந்தில் முருகன் கோயில் கோபுர விமான கலசத்தில் உத்தரகோசமங்கை முத்துக்குமார் குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். அருகே உள்ள அலங்கார மண்டபத்தில் விஸ்வகர்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.