பதிவு செய்த நாள்
20
மார்
2025
05:03
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகாதேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் துவங்கின. உடுமலை திருப்பதி ஸ்ரீ ரேணுகா தேவி கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, கடந்த, 15ம் தேதி, சிறப்பு பூஜைகள் துவங்கின. தினமும், மாலை, 6:00 மணி முதல், புற்றுக்கோவில் மற்றும் ரேணுகாதேவி கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. வரும், 29ம் தேதி, புற்றுக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் 30ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, வேங்கடவன் அரங்கத்தில், ஸ்ரீ ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.