Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி ரேணுகாதேவி ... கோவை மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி மகா பெரியவருக்கு அனுஷ அபிஷேகம் கோவை மகா சங்கரா மினி ஹாலில் காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆந்திரா காளஹஸ்திக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எட்டு நாள் யாத்திரை
எழுத்தின் அளவு:
ஆந்திரா காளஹஸ்திக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் எட்டு நாள் யாத்திரை

பதிவு செய்த நாள்

21 மார்
2025
10:03

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடம் மடாதிபதி விஜயேந்திரர், ஏகாம்பரநாதர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.


கோவில் நுழைவாயிலில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகன்னாதன் கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையோடு விஜயேந்திரரை வரவேற்றனர். மூலவர் ஏகாம்பரநாதரை விஜயேந்திரர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தின் சார்பில், விஜயேந்திரருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதை விஜயேந்திரர் பார்வையிட்டார். தொடர்ந்து கோவில் நுழைவாயிலில் உள்ள ஒரு கருங்கல் துாணில் ஆதிசங்கரர் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதை தொட்டு வணங்கினார். அதே துாணில் கண்ணப்ப நாயனார், காமாட்சி அம்மன் மற்றும் மன்மதன் அம்பெய்தும் சிற்பம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் சிறப்புகளை மற்றவர்களுக்கு விளக்கினார். காஞ்சி மடாதிபதி விஜயேந்திரருடன், சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் சல்லா. விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். 


இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியதாவது: பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்தை குறிக்கும் ஏகாம்பரநாத சுவாமி கோவிலில், சுவாமிகள் தரிசனம் செய்துள்ளார். காற்றை குறிக்கும் ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்திக்கு எட்டு நாட்கள் யாத்திரையாக நேற்று புறப்பட்டார். இதற்கு முன், நீர் ஸ்தலம் என்று போற்றப்படும் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். நெருப்புக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையிலும் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார். விரைவில் சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் தரிசனம் செய்ய உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar