ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.69 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 11:03
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.69 கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்குப் பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர். பின் கோயில் கல்யாண மண்டபத்தில் காணிக்கைகளை கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, சிவனடியார்கள் குழுவினர் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 69 லட்சத்து 23 ஆயிரத்து 658 ரூபாயும், தங்கம் 68 கிராம், வெள்ளி 6 கிலோ 050 கிராம் காணிக்கையாக கிடைத்தது.