Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் மண்டபத்தில் வளர்ந்துள்ள ... திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் தினமும் அனுமதியா? ஆலோசிக்கிறது வனத்துறை
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் தினமும் அனுமதியா? ஆலோசிக்கிறது வனத்துறை

பதிவு செய்த நாள்

01 ஏப்
2025
04:04

ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பினை அமுல்படுத்துவதா? அல்லது மேல்முறையீடு செய்வதா என்பது குறித்து அரசு வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.


இக்கோயிலில் தற்போது அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்து வருகிறது. இங்கு தினமும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் சுந்தரபாண்டியத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில், தினமும் காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை வனத்துறை சோதனை சாவடி வழியாக பக்தர்களை அனுமதிக்கவும், இரவில் யாரேனும் மலையில் தங்கினால் அவர்களை கைது செய்யவும், பாலிதீன், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றும் பொருட்களை தடை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சதுரகிரி பக்தர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எப்போது முதல் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது விடுமுறை நாட்களில் வெளி மாவட்ட பக்தர்கள், தாணிப்பாறை வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை அமுல்படுத்தி தினமும் பக்தர்களை அனுமதிக்கலாமா அல்லது நடைமுறை சிக்கல்களை காரணம் காட்டி மேல்முறையீடு செய்யலாமா என வனத்துறை கருதுகிறது. இதற்காக அரசு வழக்கறிஞரிடம் கலந்து ஆலோசிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar