Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவிலில் தேர் ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 36 சவரன் தங்க கிரீடம் காணிக்கை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு 36 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்; அனைத்து பூஜைகளும் அத்திமர விக்கிரகங்களுக்கே நடைபெறும்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மூலவர்களுக்கு பாலாலயம்; அனைத்து பூஜைகளும் அத்திமர விக்கிரகங்களுக்கே நடைபெறும்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
05:04

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மூலவர்களுக்கு இன்று பாலாயம் நடந்தது. ஏப். 7 முதல் இன்று காலை வரை நான்கு கால யாகசாலை பூஜை நடந்தது.


யாகசாலை பூஜைக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு 5 யாக குண்டங்களும், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது. தங்க குடத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் சக்தியும், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக் கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சக்திகள் தனித்தனியாக வெள்ளி குடங்களிலும் கலை இறக்கம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களின் சக்திகள் வரைபடங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டு, 200 சொம்புகளில் புனித நீர் நிரப்பி யாகசாலையில் வைத்து பூஜை நடந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு தீபாராதனை முடிந்து, மூலவர்களின் சக்தி கலை இறக்கப்பட்ட புனித நீர் குடங்கள் சண்முகர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எழுந்தருளச் செய்யப்பட்டிருந்த அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட மூலவர்களின் விக்ரகங்களுக்கு சக்தி கலையேற்றம் செய்யப்பட்டு, புனித நீர் அபிஷேகம் முடிந்து, மூலவர் கரத்திலிருந்த தங்க வேலுக்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்தது. ஏப். 7 முதல் திருப்பணிக்களுக்காக மூலஸ்தானத்திற்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் (ஜூலை 14) வரை அனைத்து பூஜைகளும் மூலவர்களின் அத்திமர விக்கிரகங்களுக்கு நடைபெறும்.  நேற்று முதல் சண்முகர் சன்னதிவரை அத்திமர மூலவர்கள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.‌ பாலாலய நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்பதேவன், ராமையா, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar