Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழாக்கோலம் பூண்டது மயிலாப்பூர் ; ... விழுப்புரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலில் 14ம் தேதி லட்சதீப உற்சவம் விழுப்புரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை ஆற்றங்கரையில் ஆராட்டு; யானையில் வந்த சுவாமி
எழுத்தின் அளவு:
சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை ஆற்றங்கரையில் ஆராட்டு; யானையில் வந்த சுவாமி

பதிவு செய்த நாள்

11 ஏப்
2025
03:04

சபரிமலை; சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா ஆராட்டுடன் நிறைவு பெற்றது. ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை நாளை மறுநாள் சபரிமலையில் தொடங்குகிறது. 


பங்குனி உத்திர திருவிழா கடந்த இரண்டாம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவபலி, ஸ்ரீ பூதபலி போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்று வந்தது. 9-ம் நாள் விழாவில் இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளினார். நள்ளிரவில் சுவாமி சன்னிதானம் திரும்பினார். இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் சுவாமியை ஸ்ரீகோயிலுக்குள் ஆவாகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பூஜைகள் நடைபெற்றது 8:00 மணிக்கு ஆராட்டுப்பவனி பம்பைக்கு புறப்பட்டது. 11.45 மணிக்கு பம்பை நதியில் பாராட்டு . ஆராட்டு விக்ரகத்துக்கு குளக்கரையில் பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்த பின்னர் விக்கிரகத்துடன் பூஜாரிகள் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர் அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழக்கினர். மாலை 3:00 மணிக்கு ஆராட்டுபவனி சன்னிதானத்திற்கு புறப்பட்டது. இரவு 8:30 மணிக்கு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. நாளை முதல் சித்திரை விசு கால பூஜைகள் தொடங்குகிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 70 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் மறுநாள் முதல் சபரிமலையில் ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 1,2,4,6,8 கிராம் எடைகளில் 916ஹால்மார்க் முத்திரையுடன் இந்த டாலர்கள் கிடைக்கும். ஆன்லைன் மூலமும் தேவசம்போர்டு அலுவலகத்தில் பணம் செலுத்தியும் இந்த டாலர்களை பெற முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar