Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் பங்குனி ... குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் தேரோட்டம் குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவிலில் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம்
எழுத்தின் அளவு:
முருகன் கோவிலில் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2025
04:04

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே முருகன் கோவிலில் வேலில் செருகப்பட்ட எலுமிச்சை பழம் 32 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது .கருவறையில் வேல் மட்டுமே உள்ளே கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் நடத்தப்படுவது வழக்கம். விழாவை முன்னிட்டு நடத்தப்படும் ஒன்பது நாட்கள் உற்சவ காலங்களில் தினமும் வேலில் செருகப்படும் எலுமிச்சை பழங்கள் இடும்பன் பூஜையில் வைத்து பங்குனி உத்திரத்திர விழா நாளன்று நள்ளிரவு ஏலம் விடப்படும். அதன்படி நேற்று இரவு 11:00 மணிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள், குடும்ப பிரச்னை உள்ளவர்கள், வியாபாரத்தில் கஷ்டம் அடைந்தவர்கள் என பலர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். முதல் நாள் எலுமிச்சை பழம் 20 ஆயிரம் ரூபாய்க்கும் இரண்டாம் நாள் பணம் 3,600 ரூபாய் என 9 எலுமிச்சம் பழங்களும் 32 ஆயிரத்து 400 ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலத்தில் சென்னை, திருச்சி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலுார், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், மழையின் காரணமாக இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 2 லட்சம் ரூபாய் குறைவாக ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar