பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா; அம்மனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2025 04:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா நடந்தது. இக்கோயிலின் பங்குனித்திருவிழா ஏப். 3ம் தேதி பூச்சொரிதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. இன்று ஏராளமானோர் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.