Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்த விமானத்தில் திருவல்லிக்கேணி ... சபரிமலையில் புதிய பஸ்ம குளம் 6 மாதத்தில் பணி முடிக்க திட்டம் சபரிமலையில் புதிய பஸ்ம குளம் 6 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2025
10:04

துாத்துக்குடி; நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி, திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்புள்ள கொடி மரத்தின் அருகே, உற்ஸவர் கள்ளபிரான் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கொடி பட்டம் சுற்றி கொண்டு வரப்பட்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. விழாவில் ஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தேரோட்டத்திற்கு பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழா நாட்களில் தினமும், காலையிலும் இரவிலும் சுவாமி கள்ளபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை ஏப். 22ம் தேதியும், திருத்தேரோட்டம் 26ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் புதிய பஸ்ம குளம் அமைக்க, நேற்று பூமிபூஜை போடப்பட்டது. கேரள மாநிலம், சபரிமலை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; சாரம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. சாரம் முத்து ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன்கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா மற்றும் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அருளாசியுடன் ஏகாதச ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar