திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் அம்மனுக்கு காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா துவங்கி நேற்று அதிகாலை தீபாராதனையுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை மூலவருக்கும், சிம்மம் கொடி படத்திற்கும், கொடிமரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்து அம்மனுக்கு கொடியேற்றி காப்புக் கட்டி விழா துவங்கியது. உற்ஸவ அம்மன்கள் ரிஷபம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து பத்துநாட்கள் வசந்தப் பெருவிழா நடைபெறும். தினசரி இரவில் அம்பாள் பவனி நடைபெறும். ஏப்.20ல் பொங்கல் விழா, ஏப்.22 ல் பால்குடம், ஏப்.26ல் அம்மன் ரத ஊர்வலம், ஏப்.27ல் காலையில் தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு, இரவில் தெப்பத் திருவிழாவும், தீப வழிபாடும் நடைபெறும். ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழுவினர் செய்கின்றனர்.