பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு அதிபதி வாயு. வேகமாக செல்வதில் நிகரற்றது என்பதால், வாயுவேகம் மனோ வேகம் என்று சொல்வர். மனதில் எதை நினைத்தாலும், அந்தக் கணமே மனம் அங்கு சென்றுவிடும். ஆஞ்சநேயருக்கு மாருதி என்ற பெயருண்டு. இதற்கு வாயுவின் பிள்ளை என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு அதிதேவதை உண்டு. இதில் சுவாதிக்குரியவராக இருப்பவர் வாயு. பிரகலாதனுக்கு ஆபத்து நேர்ந்த சமயத்தில் இரண்யனிடம் இருந்து காப்பதற்காக புயலைப் போல பறந்து வந்தவர் நரசிம்மர். எனவே அவருக்குரிய நட்சத்திரமாகவும் சுவாதி அமைந்தது. வாழ்வில் எவ்வளவு பிரச்னை இருந்தாலும் தீர்வுபெற நரசிம்மரை சுவாதியன்று வணங்குங்கள்.