கோவை; ராம் நகர் கோகுலே வீதி அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 58ம்ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8ம் நாள் செவ்வாய்க்கிழமையான இன்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் அம்மன் செந்தூர அலங்காரத்துடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.