Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை சித்திரை திருவிழா; ... காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் காப்பு கட்டு நிகழ்ச்சி காரைக்கால் பத்ரகாளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி வைகையில் விடிய விடிய தசாவதார சேவை; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி வைகையில் விடிய விடிய தசாவதார சேவை; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 மே
2025
04:05

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார சேவையில் அருள்பாலித்தார்.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கிறது. மே 7ல் காப்பு கட்டுடன் விழா துவக்கி, மே 12 அதிகாலை 3:20 மணிக்கு வைகையில் அழகர் இறங்கினார். 9:30 மணிக்கு குதிரை வாகனத்தில் செண்பகப்பூ, மகிழம்பூ, ஏலக்காய், தாமரை மலர்கள் சூடி அலங்காரமாகிய அழகருக்கு பல்லாயிரம் பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். தொடர்ந்து இரவு வண்டியூர் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பெருமாள் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அனைத்து வகையான பிரசாதங்களையும் வழங்கினர்.


நேற்று இரவு சேஷ வாகனத்தில் பரமபதநாதனாக எழுந்தருளினார். அப்போது மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, வாணியர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். அப்போது அர்ச்சாவதாரம், மச்சம், கூர்மம், வாமன, பரசுராம, பலராம, கிருஷ்ணாவதாரம் மற்றும் மோகினி அவதாரங்களில் எழுந்தருளினார். வைகையில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர். இதன்படி இரவு 12:00 மணிக்கு துவங்கிய தசாவதார சேவை காலை 6:30 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து காலை 11:00 மணி முதல் சந்தனம், தயிர், பால், பஞ்சாமிர்தம் என பலவகையான அபிஷேகங்கள் நடந்து, மகாதீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar