Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மணக்குள விநாயகர் கோவிலுக்கு ரூ.5 ... திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திருத்தணி சப்த கன்னியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா!

பதிவு செய்த நாள்

18 மே
2025
12:05

மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை,கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாக வாகனம், ஆளும்பல்லக்கு, ஹம்ச வாகனம், பெருமாள் தாயார் திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உற்சவங்கள்தினமும் விமரிசையாக நடந்தன.

பிரம்மோத்சவத்தின், ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. காலை 8:30 மணிக்கு வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் புறப்பட்ட பெருமாள், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாண வேடிக்கை, மங்கள இசையுடன் ‘கோவிந்தா... கோவிந்தா’ என கோஷம் எழுப்பியபடி, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பக்தர்களுக்காக, தன்னார்வலர்கள் குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர். மின்வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கரியமாணிக்க பெருமாள்

ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் வார்ஷிகாபிரம்மோத்சவ விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் உற்சவர் யாளி, சேஷ, கருட, அனுமன் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளினார். நேற்று தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாவூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar