கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2025 10:05
நத்தம்; கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் கோயில் அறங்காவலர்கள் சிவலிங்கம், முத்துகுமார்சாமி செய்து வருகின்றனர்.