கமுதி; கமுதி அருகே காமாட்சியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் காமாட்சியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் 508 விளக்குபூஜை நடந்தது. காமாட்சியம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.