பெருமாநல்லுார் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2025 10:05
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார், மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெருமாநல்லுார், மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா கடந்த 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று காலை கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலையில் திருக் கம்பம் கங்கையில் சேர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மதியம் மஞ்சள் நீர், அம்மன் திருவீதி உலா செல்லுதல், மாலை கும்பம், முளைப்பாரி கங்கையில் சேர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.