Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் சக்தி மாரியம்மன் கோவில் ... மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் உலா; நாளை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
காஞ்சி வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் உலா; நாளை தீர்த்தவாரி

பதிவு செய்த நாள்

29 மே
2025
11:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏழு நாட்கள் நடைபெறும் வசந்த உத்சவம், கடந்த 24ம் தேதி துவங்கியது.

உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் கண்ணாடி அறையில் எழுந்தருளும் பெருமாளுக்கு விசேஷ பூஜை நடந்து வருகிறது. மாலை 6:00 மணியளவில், கண்ணாடி அறையில் இருந்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள் வெவ்வேறு மலர் அலங்காரத்தில், சன்னிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சன்னிதியில் எழுந்தருள்கிறார். அங்கிருந்து புறப்பாடாகி, கோவிலில் உள்ள அத்தி வரதர் மண்டபம் என, அழைக்கப்படும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அங்கு திருவாராதனம் உள்ளிட்ட பூஜை நடந்து வருகிறது. இதில், ஆறு நாட்களும் தினமும் பல்வேறு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் வசந்த உத்சவம் நிறைவு நாளான நாளை, காலை 11:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து வரதராஜ பெருமாள் புறப்பாடாகி, வசந்த மண்டபம் வந்தடைகிறார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்கள் பொது தரிசனமும் நடைபெறும். மாலை 6:00 மணியளவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், மாட வீதிகளில் உலா வருகிறார். நிறைவாக, அனந்தசரஸ் குளத்தில் ஸ்ரீசடாரி தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று வைகாசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
மேலூர்; மேலூரில் நடைபெறும் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து திருமறைநாதர், ... மேலும்
 
temple news
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் எட்டு நாட்கள் நடந்த சித்திரை திருவிழாவில் 16 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள, சார்தாம் எனப்படும் நான்கு புண்ணிய தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar