கோவை; கவுண்டம்பாளையம் அரசு ஊழியர் ஹவுசிங் யூனிட் அருகே அமைந்துள்ள அம்பிகை ஸ்ரீ பனங்காட்டு மாரியம்மன் கோவில் உற்சவ விழா கடந்த 26ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு பூச்சாட்டு நிகழ்வு நடைபெற்றது. அதனையடுத்து அக்னி கம்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இரண்டாம் நாள் காலை 8 மணியளவில் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்வும், அம்மன் சீர் அழைப்பும் அதனை தொடர்ந்து அம்மன் சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது. மூன்றாம் நாள் அம்மன்கரகம் எடுத்து வருதல், அக்னி சட்டி ஊர்வலம் ஆகியன நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது. வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.