கூத்தலூரில் புரவி எடுப்பு விழா; குதிரைகள், காளைகள் வைத்து சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 05:05
காரைக்குடி; காரைக்குடி அருகே கூத்தலூரில் புரவி எடுப்பு விழா நடந்தது.
கூத்தலூர் தேர்பாருடைய அய்யனார், பெரியநாயகி அம்மன், அடைக்கலம் காத்தவள் கோயில் தேர் திருவிழா மற்றும் புரவி எடுப்புத் திருவிழா கடந்த மே 20 ஆம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கடந்த 28ஆம் தேதி தேரோட்டம் நடந்தது. திருவிழாவின் கடைசி நாளான, 10 நாள் திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் புரவி எடுப்பு விழா நடைபெறும். அதனையொட்டி, கோயில் முன்பு 3 குதிரைகள் 5 காளைகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கிராம மக்கள் புரவிகளை தூக்கிச் சென்று, அய்யனார் கோயிலில் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கூத்தலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.