பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும். பஞ்சமி திதி நாட்கள் வாராஹியை வழிபட மிக சிறந்த நாளாகும். சனிக்கிழமைகளில் வாராஹியை நெய் தீபம் ஏற்றி வழிபட எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். தடைகள் யாவும் நீங்கும். சப்தமாதர்களில் ஒரு தேவதை வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், வெற்றிக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லை என்பது முன்னோர் சொல். இன்று சகல வரங்களையும் தந்தருளும் வாராஹியை வழிபடுவோம்!