பதிவு செய்த நாள்
31
மே
2025
01:05
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழாயொட்டி புஷ்பபல்லாக்கு வீதியுலா நடந்தது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் துர்முக வருஷ பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது. பின் பஞ்சமூர்த்தி வீதி உலா கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவமும், நேற்று இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலாவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் நால்வர் மின் அலங்கரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இன்று செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும், வரும் 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும். 6ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.7ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதின கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீ மத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.